search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு நிவாரண அதிகாரி"

    ஒடிசா மாநிலத்தில் இடி, மின்னல் தாக்குவதால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை விடுக்கும் சென்சாரை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #odisha #lightningsensor
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு 419 பேர் இடி மின்னல் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய சிறப்பு நிவாரண ஆணையர் சேதி, மின்னல் தாக்கி கடந்த 3 நாட்களில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக மின்னலை முன்கூட்டியே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மின்னல் தாக்கத்தை அரை மணி நேரத்துக்கு முன்பாகவே நம்மால் அறிந்துகொள்ள முடியும் என்றும், மின்னல் தாக்குதல் குறித்த தகவலை ஊடகங்கள் வழியே மக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள எச்சரிக்கை விடுக்க முடியும் எனவும் சிறப்பு நிவாரண ஆணையர் சேதி கூறியுள்ளார்.

    மாநிலத்தின் உயரமான பகுதிகளிலும், கட்டிடங்களிலும் இந்த மின்னலை கண்டறியும் சென்சாரை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #odisha #lightningsensor
    ×